BREAKING சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றுக்கொண்டார் !!
BREAKING சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றுக்கொண்டார் !!
சென்னை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் பிரியா பதவி ஏற்றுக்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் போட்டியின்றி தேர்வானார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்துவைத்தார். மாநகராட்சி மேயர் பதவிக்கான அங்கீகாரம், மேயர் அணிவிக்கும் அங்கி உள்ளிட்டவற்றை மாநகாட்சி ஆணையர் பிரியாவுக்கு வழங்கினார். இதனையடுத்து பிரியா சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் அவர் தனது மேயர் இருக்கையில் அமர்ந்தார். 28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 74ஆவது வார்டில் போட்டியிட்டு பிரியா வெற்றிபெற்றார்.
வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையை பிரியா ராஜன் பெற்றுள்ளார்.
newstm.in