#BREAKING:- மயங்கி விழுந்தார் சீமான்.. மருத்துவமனையில் அனுமதி..!
#BREAKING:- மயங்கி விழுந்தார் சீமான்.. மருத்துவமனையில் அனுமதி..!
திருவொற்றியூரில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான் திடீரென மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில், ஆக்கிரமிப்பில் இருந்த சில வீடுகள் இடிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின்னர் சீமான், பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.