உக்ரைனில் ரஷ்ய போர் தாக்குதல் 48-வது நாளாக நடந்து வருகிறது. ரஷ்ய வீரர்கள் நாட்டின் பல இடங்களை நாசமாக்கியுள்ள நிலையில் பெண்களை சீரழித்து கொலை செய்யும் கொடூரத்தையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் புச்சாவில் 16 வயது டீன் ஏஜ் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன்படி கரீனா என்ற 16 வயது டீன் ஏஜ் பெண் ரஷ்ய வீரர்களால் சீரழிக்கப்பட்டு, தலையில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

கரீனாவை காணாமல் தொடர்ந்து அவர் தாயார் தேடி வந்த நிலையில் அந்த அழகியப்பெண்ணின் அலங்கோலமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட உடல் புச்சாவில் தாயாருக்கு கிடைத்துள்ளது.இதையடுத்து மகள் சடலத்தை பார்த்து தாயார் கதறி அழுது துடித்துள்ளார்.

இது தொடர்பான தகவலையும், கரீனாவின் புகைப்படத்தையும் உக்ரேனிய எம்.பி லிசியா வசிலிங்கோ வெளியிட்டுள்ளார்.

Tags: