இரண்டு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போட்டும் கொரோனாவில் சிக்கிய பில்கேட்ஸ்..!!

இரண்டு தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போட்டும் கொரோனாவில் சிக்கிய பில்கேட்ஸ்..!!;

Update: 2022-05-11 13:44 GMT

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ இரு ஆண்டுகளைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.83 கோடியாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47.32 கோடியாகவும் உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62.80 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான  பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிறிய அளவிலான அறிகுறிகள் தெரிந்தது. எனவே தொற்றில் இருந்து குணமாகும் வரை என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.பில்கேட்ஸ் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Tags:    

Similar News