முக்கிய அறிவிப்பு..!! திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்!!
முக்கிய அறிவிப்பு..!! திட்டமிட்டபடி நாளை 10-ம் வகுப்பு ரிசல்ட்!!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து, 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் 6-ம் தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதன்பின், கடந்த 1-ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி, வரும் ஜூன் 17-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
தேர்வு எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.