சுதந்திர தினவிழாவில் கொடூர தாக்குதல்.. 3 பேர் கொலை.. பலர் காயம் !!
சுதந்திர தினவிழாவில் கொடூர தாக்குதல்.. 3 பேர் கொலை.. பலர் காயம் !!
இஸ்ரேல் நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. அந்நாட்டு மக்கள் அனைவரும் பெரும் உற்சாகத்தில் சுதந்திர தினத்தை கொண்டாடினர்.
இந்நிலையில், டெல் அவிவ் நகரில் பெரும் திரளாக கூடியிருந்த கூட்டத்தில் மர்ம நபர்கள் 2 பேர் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். அதாவது அவர்கள் இருவரும் கூட்டத்தில் நுழைந்து அங்கு கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் சரமாரியாக தாக்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பினர்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கத்தியால் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விவரம் தெரியவரவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறுகையில், பயங்கரவாதிகள் மீதும், அவர்களுக்கு ஆதரவான சூழலிலும் கை வைப்போம். அதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.
newstm.in