நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை!!

நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை!!

Update: 2022-02-13 08:23 GMT

நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று .ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. 2020 மார்ச் மாதத்தில் பாதிப்பு உக்கிரம் அடைந்ததால், அப்போது நாடு ழுமுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன.

அந்த வகையில் ரயில்களில் ஐஆர்சிடிசி கேட்டரிங் சேவையும் நிறுத்தப்பட்டது. கொரோனா குறைந்ததும் சில மாதங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. அப்போது .ஆர்.சி.டி.சி. கேட்டரிங் சேவை இல்லாததால் நீண்ட தூரம் செல்லும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த ஆண்டு இறுதியில் ப்ரீமியம் ரயில்களான ராஜதானி, சதாப்தி, டுராண்டோ ஆகிய ரயில்கள் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை (பிப்ரவரி 14) முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று .ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், .ஆர்.சி.டி.சி. கேட்டரிங் சேவையை மீண்டும் தொடங்குகிறது. ஆனாலும் கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும் என்று .ஆர்.சி.டி.சி. நிறுவனம் கூறியுள்ளது.

newstm.in

Similar News