நாளை பணிக்கு வரணும்.. கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை..!

நாளை பணிக்கு வரணும்.. கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை..!

Update: 2022-03-18 17:26 GMT

கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “வரும் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

எனவே, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க நாளை அனைவரும் தவறாது பணிக்கு வருகைதர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Similar News