இந்த மாவட்டத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு..!! வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை..!!

இந்த மாவட்டத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு..!! வணிக வளாகங்களில் ஏசி பயன்படுத்த தடை..!!

Update: 2022-06-21 05:25 GMT

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 60 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 306 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 122 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.

மேலும், திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். துக்க நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மற்ற மாவட்டங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Similar News