கோவில்பட்டி அருகே பரபரப்பு.. பற்றியெரிந்தது பஞ்சு லாரி..!
கோவில்பட்டி அருகே பரபரப்பு.. பற்றியெரிந்தது பஞ்சு லாரி..!
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள அளவந்தன்குளத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான லாரி கோவையில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு சென்று கொண்டிருந்தது.
லாரியை, ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கே.கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (27) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி கயத்தாறை கடந்து வரும்போது, லாரியின் பக்கவாட்டில் உள்ள இரும்பு தகரம் உடைந்துள்ளது.
இதை கவனித்த ஓட்டுநர், தனது சொந்த ஊரான கே.கைலாசபுரத்தில் உள்ள வெல்டிங் பட்டறைக்கு லாரியை கொண்டு சென்றார். அங்கு வெல்டிங் மூலம் லாரியின் பக்கவாட்டு தகரத்தை பொருத்தும் பணி நடந்தது.
அப்போது, அதிலிருந்து வந்த தீப்பொறி பஞ்சு மீது விழுந்தது. இதில் பஞ்சு தீப்பற்றி எரிந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி முயற்சி செய்தனர். ஆனால், காற்றின் வேகத்தில் தீ மளமளவென்று லாரி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
லாரியில் இருந்த பஞ்சு முழுவதும் எரிந்து, லாரியும் முழுமையாக சேதமடைந்தது. நாரைக்கிணறு காவல் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.