அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்..!!

அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம்..!!;

Update: 2022-07-10 19:57 GMT

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் நாட்டின் 22 மில்லியன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகி, ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னும் இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் தெரியவில்லை. தற்போதும் பல நாட்கள் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மிகக்கடுமையாக உயர்ந்துள்ளதால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் அதிபர் மாளிகையை மக்கள் நேற்று முற்றுகையிட்டதால் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தப்பியோடினார். அவர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகளை செய்தும் பலனளிக்கவில்லை. இதையடுத்து அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பது, சமையல் அறையில் உணவு சமைத்து சாப்பிடுவது, அங்குள்ள அறையை சுற்றி பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தையும் விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள ஒரு ரகசிய வீட்டையும் போராட்டக்காரர்கள் சுற்றி பார்த்தனர். இந்த பாதாள ரகசிய வீடு என்பது போர் சமயத்தில் அவசரத்திற்காக பயன்படுத்துவது. இந்த ரகசிய வீடு மிகவும் பெரியதாகவே இருக்கிறது. இந்த பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிந்து 1.79 கோடி பணத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் அமைதியை நிலைநாட்ட போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க முப்படை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வேளை கோத்தபய இங்கிருப்பார் என நினைத்து தேடினார்களா என தெரியவில்லை.

Tags:    

Similar News