குழந்தை வெள்ளையா பிறக்கக்கூடாது பிறந்தால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் ஜாரவா பழங்குடியினர்!!
குழந்தை வெள்ளையா பிறக்கக்கூடாது பிறந்தால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் ஜாரவா பழங்குடியினர்!!;
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நிறைய பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள், மரபுகள் இருக்கும். அந்த தீவில், தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வசிப்பவர்கள்தான் ஜாரவா பழங்குடியினர். இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்றும் அழைக்கிறார்கள்.இவர்கள் இந்திய பகுதியில் வசித்து வந்தாலும், இவர்கள் பசிபிக் தீவை சேர்ந்தவர்கள் என்று மரபணுச் சோதனையில் தெரியவந்துள்ளது.
வித்தியாசமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வரும் இவர்கள் இனத்தில் பெண்களுக்கு கருப்பு நிறத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டுமாம். ஒரு வேளை வெள்ளை நிறத்தில் பிறந்துவிட்டால் அந்த குழந்தையை அவர்கள் கொன்று விடுவார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அந்தமானில் ஜாரவா பழங்குடியினத்தவர்கள் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் மொத்தம் 380 பேர் மட்டுமே உள்ளனர். கற்காலத்தில் வசித்தது போலவே வசித்து வரும் இவர்கள் வெளியுலக தொடர்பின்றி வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடி உண்கிறார்கள். இவர்கள் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்க மறுத்து கொன்று விடுகிறார்கள்.
ஜாரவா பழங்குடியினத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு தாய் உட்பட அனைத்து பெண்களும் தாய்ப்பாலை கொடுப்பது வழக்கம். அதேபோல் குழந்தை கருப்பாக பிறக்க வேண்டும் என்பதால் கர்ப்பிணிகளுக்கு விலங்குகளின் ரத்தத்தை குடிப்பதற்கு கொடுப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த சமூகத்தில் ஒரு பெண் கணவரை இழந்துவிட்டால் அவரது குழந்தையையும் கொல்லும் வழக்கம் இவர்கள் இனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.