செல்போன் பயன்படுத்தக் கூடாது.. கண்டக்டர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!

செல்போன் பயன்படுத்தக் கூடாது.. கண்டக்டர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு..!;

Update: 2022-07-26 05:20 GMT

சேலம் கோட்ட அரசுப் பேருந்துகளில் பணிபுரியும் நடத்துநர்கள் செல்போன் பயன்படுத்தக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பொன்முடி விடுத்துள்ள சுற்றறிக்கையில், “சேலம், தர்மபுரி மண்டலமான, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கண்டக்டர் செல்போன் பார்த்தபடியே இருப்பதாக புகார்கள் வருகிறது.

பகலில் பணியின்போது, இரண்டு படிக்கட்டுகளும் தங்கள் பார்வையில் இருக்கும்படி பின் இருக்கையில் அமர்ந்து கண்டக்டர் பணி புரிய வேண்டும்.

இரவில், நீண்ட தூர பேருந்துகளில் முன் இருக்கையில் அமர்ந்து, டிரைவருக்கு உதவியாக விழிப்புணர்வுடன் பேருந்தை இயக்க உதவ வேண்டும்.

கண்டக்டர்கள் செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வின் போது செல்போன் பயன்படுத்துவது தெரிந்தால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடத்துனர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Similar News