அதிர்ச்சியில் மருத்துவர்கள் ..!! கர்ப்பமாக இருக்கும்போது மீண்டும் கர்ப்பமான தாய் ..!!

அதிர்ச்சியில் மருத்துவர்கள் ..!! கர்ப்பமாக இருக்கும்போது மீண்டும் கர்ப்பமான தாய் ..!!;

Update: 2022-06-04 04:50 GMT

அமெரிக்காவில் காரா வின்ஹோல்ட் என்ற 30 வயதாகும் பெண் ஏற்கனவே மூன்று முறை கருச்சிதைவுகளைச் சந்தித்த பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமான நிலையில், பின்னர் ஒரு மாதம் கழித்து, மீண்டும் கருவுற்றார்.

ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹெல்த்லைன் படி, முதல் நாளுக்கு சில நாட்கள் அல்லது வாரங்களில் இது நிகழலாம்.

இறுதியாக, காரா வின்ஹோல்டுக்கு 6 நிமட இடைவெளியில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. காரா வின்ஹோல்ட், தனக்கு நடந்தது ஒரு அதிசயம் என்று 100 சதவீதம் நம்புவதாக கூறியுள்ளார். வின்ஹோல்ட் மற்றும் அவரது கணவருக்கு 2018-ல் முதல் மகன் பிறந்தார். தம்பதியினர் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்தபோது, ​​அவருக்கு 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டது.

மீண்டும் கருவுற்றால் மீண்டும் சிதைந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், தைரியமாக மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்தபோது அவருக்கு இப்போது இரட்டை குழந்தைகள் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்ததுள்ளது.

Tags:    

Similar News