இரட்டை இலை சின்னம் முடக்கம்.. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை..!

இரட்டை இலை சின்னம் முடக்கம்.. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை..!

Update: 2022-06-19 04:45 GMT

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எழுதிய 11 அம்சங்களை உள்ளடக்கிய பரபரப்பு கடிதம் வெளியாகியுள்ளது.

அதில், ‘ஒற்றைத் தலைமைக்காக கட்சி விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் எனவும், தற்போது உள்ள இரட்டை தலைமை பதவிக் காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் தேர்தல் ஆணையத்திலும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம்’ எனக் கூறப்பட்டு உள்ளது.

Similar News