ஓட்டுநருக்கு ஹார்ட் அட்டாக் ! - அனுபவம் இன்றியும் பேருந்தை இயக்கிய துணிச்சல் பெண்- வீடியோ !!
ஓட்டுநருக்கு ஹார்ட் அட்டாக் ! - அனுபவம் இன்றியும் பேருந்தை இயக்கிய துணிச்சல் பெண்- வீடியோ !!
கோடை தொடங்கிவிட்டாலே சுற்றுலா கொண்டாட்டம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல பெரிதும் ஆர்வம் காட்டுவர். இதனால் சுற்றுலாத் தலங்கள் நிரம்பியது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மொராச்சி சின்சோலி பகுதியில் பெண் பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ஒன்று சென்றுள்ளது. பெண்கள் அனைவரும் சுற்றுலாவுக்கு பேருந்தில் உற்சாகமாக சென்று கொண்டிருந்தார்.
பேருந்து சென்றுக்கொண்டிருக்கும் போதே, ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இந்த திடீர் மாரடைப்பால் தடுமாற்றம் அடைந்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்றுவிட்டார். இதை கவனித்த பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி கேட்டார். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. இதை கண்ட பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓட்டுனரின் நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே வந்ததால். பெண் பயணிகளில் ஒருவரான யோகித்தா சதவ் என்பவர் தானே பேருந்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டார்.
ஆனால் மீண்டும் அந்த டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் விவேகத்துடன் செயல்பட்ட அந்த பெண் சாமர்த்தியமாக பேருந்தை செலுத்தி அந்த ட்ரைவரை மருத்துவமனையில் அனுமதித்தார். அந்த பெண் பயணியின் விவேகமான செயல்பட்டால் அந்த பேருந்து ஓட்டுனரின் உயிர் காக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி செய்திகளில் தற்போது மிகவும் வைரலாக பரவிவருகிறது.
மேலும் பலர் அந்த பெண்ணின் வீர செயலை பாராட்டி வருகின்றனர். ஒரு பேருந்தை அவ்வளவு எளிதாக ஓட்ட முடியாது. எவ்வளவு நன்றாக கார் ஓட்டினாலும் பேருந்து மற்றும் லாரி ஆகிய வாகனங்களை எளிதாக ஓட்டிவிடமுடியாது. அதற்கென தனி பயிற்சி மற்றும் ஆறு மாத கால அனுபவம் வேண்டும்.
இது போன்று பெரிய வாகனங்களுக்கென தனியாக ஹேவி லைசென்ஸ் எடுக்கவேண்டும். இந்த லைசென்ஸ் 6 மாத கண்காணிப்புமிகு பிறகே கொடுக்கப்படும். ஆனால் எந்தவித முன் அனுபவமும் இன்றி அந்த பெண் பேருந்தை ஓட்டியது வைரலாகி வருகிறது.
newstm.in