சென்னையில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு!!
சென்னையில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைப்பு!!
சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டு தாம்பரம் வழியாக புறப்பட்டு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் வழியில் ஆங்காங்கே நிறுத்தி வருவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து புறப்பட்ட புறநகர் ரயில் சிக்னல் கோளாறு காரணமாக வண்டலூர் ரயில் நிலையத்தில் நின்றது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பீச் ஸ்டேஷனில் இருந்து செல்லக்கூடிய புறநகர் ரயிலும் செங்கல்பட்டு தாம்பரத்தில் இருந்து வரக்கூடிய ரயில்களும் குறிப்பிட்ட அட்டவணை நேரப்படி இல்லாமல் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் வேலைக்கு செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
காலை வேளையில் பெரும்பாலான பயணிகள் மின்சார ரயில்களை நம்பியே உள்ளனர். வேலைக்கு, பள்ளி, கல்லூரி என பலரும் மின்சார ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
newstm.in