ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கிச்சூடு.. உயிருக்கு ஆபத்தான நிலை !!

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மீது துப்பாக்கிச்சூடு.. உயிருக்கு ஆபத்தான நிலை !!;

Update: 2022-07-08 09:56 GMT

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழக்கும் ஆபத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். அவர் இந்நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற இடத்தை பிடித்தவர்.

இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது, மறைந்து இருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த காயத்துடன் சுருண்டு விழுந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இதில் அபேவுக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. 

அதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

​​​​​​​

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சுட்டவர் யார், என்ன காரணம் ஏதும் இன்னும் அறியப்படவில்லை. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது. 

newstm.in

Tags:    

Similar News