பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஓய்வு!!

பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் மோர்கன் ஓய்வு!!;

Update: 2022-06-30 04:10 GMT

கடந்த 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது, அலெஸ்டர் குக்கிடம் இருந்து மார்கனுக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் இங்கிலாந்துக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இவரின் தலைமையில் தான் இங்கிலாந்து அணி பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு முதலே இயான் மோர்கன் உடற்தகுதி மற்றும் ஃபார்ம் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடி வந்த நிலையில் நேற்று, மோர்கன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிட்டன. இந்நிலையில், தற்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) இதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இயான் மோர்கனின் அறிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், “நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க வந்துள்ளேன். எனது வாழ்க்கை மற்றும் எந்த வெற்றிகளையும் சாத்தியமாக்கிய எனது அணியினர், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திரைக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் நான் சாதித்ததைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன், ஆனால் நான் அதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


 

Tags:    

Similar News