பிரபல இசைக்கலைஞர் திடீர் மரணம்.. பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் !!
பிரபல இசைக்கலைஞர் திடீர் மரணம்.. பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் !!
பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ஷிவ்குமார் சர்மா மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.
ஜம்மு - காஷ்மீரை பூர்விகமாக கொண்டவர் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா. பாரம்பரிய இசைக்கருவியான பிரபலமாக்கிய பெருமை ஷிவ்குமார் ஷர்மாவையே சேரும். சந்தூர் இசைக்கருவியை இந்தியப் பாரம்பரிய இசையை வாசித்த முதல் கலைஞர் என்கிற பெயரைப் பெற்றார். சந்தூர் மட்டுமின்றி தபேலா இசைக்க தெரிந்தவர் ஷிவ்குமார் ஷர்மா.
பாடகர் தம்பதிக்கு மகனாக பிறந்த ஷிவ்குமார் ஷர்மா 5 வயதில் தனது அப்பாவிடம் இசை கற்க தொடங்கினார். ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்தும் பாடியும் பல ஆல்பங்களை உருவாக்கியுள்ளார். 13 வயதில் சந்தூர் கருவியை மீட்ட பயிற்சி பெற தொடங்கினார் ஷிவ்குமார் ஷர்மா.
இவரது சாதனை பயணத்தை பாராட்டும் விதமாக பத்மஸ்ரீ மற்றும் பத்மவிபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. இசைத்துறையில் ஆற்றிய சேவைக்காக பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகளையும் குவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த ஷிவ்குமார், இன்று திடீர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா ஜியின் மறைவால் நமது கலாச்சார உலகம் ஏழ்மையில் உள்ளது. உலக அளவில் சந்தூரை பிரபலப்படுத்தினார். வரும் தலைமுறையினரையும் அவரது இசை கவரும் வகையில் இருக்கும். அவருடனான எனது தொடர்புகளை நான் அன்போடு நினைவில் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி... என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஷிவ்குமார் ஷர்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த ஷிவ்குமார் ஷர்மாவுக்கு மனோரமா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். அவரது மகன் ராகுல் ஷர்மாவும் சந்தூர் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in