5 வயது சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு வைத்த தந்தை!!

5 வயது சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு வைத்த தந்தை!!;

Update: 2022-07-27 16:56 GMT

தாயை காண சென்ற 5 வயது சிறுவனுக்கு தந்தை சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த அகமது கான் (33) என்பவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சனனுர் அலாம் ஷேக் (29) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

5 வயது மகன் தந்தை அகமது கானுடன் வசித்து வருகிறார். தனது தாயை அவ்வப்போது சென்று சந்திக்கும் மகனை, அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். மேலும் தாயை சந்திக்க கூடாது என்று அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை தனது தாயை சந்திக்க சென்ற மகன், தந்தை தனக்கு சிகெரெட்டால் சூடு வைத்ததாக அழுதுகொண்டே கூறியுள்ளார். மேலும் தன்னிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையில் சிறுவனின் தாய் சனனுர் அலாம் புகார் தெரிவித்துள்ளார். அவரளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அகமது கானுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை காண சென்ற சிறுவனுக்கு சிகரெட்டால் தந்தை சூடு வைத்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News