பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு.. பிரபல பாடகி வேதனை..!
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு.. பிரபல பாடகி வேதனை..!;
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், யுவான் டி நகரிலுள்ள ராப் தொடக்க நிலைப் பள்ளியில் சால்வடார் ரொலாண்டோ ரமோஸ் என்பவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கும் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து உலக அளவில் பிரபலமான பாடகியும், நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் “நாடு முழுவதும் நடக்கும் இது மாதிரியான வன்முறைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
நமது குழந்தைகளையும், நமக்கு அன்பானவர்களாக இருப்பவர்களையும் நினைத்து பயப்படுகிறேன். நம் அனைவருக்கும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.