சுதந்திர் தின அணிவகுப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு!! 6 பேர் பலி

சுதந்திர் தின அணிவகுப்பு விழாவில் துப்பாக்கிச்சூடு!! 6 பேர் பலி;

Update: 2022-07-06 04:20 GMT

ஜூலை 4-ம் தேதி அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தை நினைவு கூர்கிறது. அதன்படி ஆண்டுதோறும் ஜூன் 4-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 246-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது.

சுதந்திரதினத்தையொட்டி அனைத்து நகரங்களிலும் அணி வகுப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மக்கள் கொண்டாட்ட களிப்பில் உள்ளார்கள். இந்நிலையில், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகோகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்கா அருகே சுதந்திரதின அணிவகுப்பு இன்று காலை 10 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) தொடங்கியது.

அப்போது, சுதந்திரதின அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர். மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News