முன்னாள் ஒடிசா முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் காலமானார்..!!

முன்னாள் ஒடிசா முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் காலமானார்..!!

Update: 2022-02-26 04:45 GMT

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல் நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.

இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஹேமானந்தா பிஸ்வால் ஒடிசாவின் முதல்வராக இரண்டு முறை பணியாற்றியுள்ளார்.

மறைந்த பிஸ்வாலின் உடல் இன்று சனிக்கிழமை (பிப். 26) காலை 6 மணிக்கு புவனேஸ்வர் நயபள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் அரசு நெறிமுறைகளின்படி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News