மாணவர்களுக்கு இலவசம்.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!

மாணவர்களுக்கு இலவசம்.. அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு..!

Update: 2022-03-09 13:36 GMT

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில், இதுவரை 17,400 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார்.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய  மாணவர்கள் 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் இந்த மையத்தை தொடர்பு கொண்டு, மனநல ஆலோசனைகளை  இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News