மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில்களில் இலவசமாக திருமணம்..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில்களில் இலவசமாக திருமணம்..!!

Update: 2022-03-13 23:12 GMT

சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருமண திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். தமிழ்நாடு முதல்ல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

Similar News