தண்டவாளத்தில் உல்லாசம்.. உடல் சிதறி பலியான காதல் ஜோடி

தண்டவாளத்தில் உல்லாசம்.. உடல் சிதறி பலியான காதல் ஜோடி

Update: 2022-03-29 16:42 GMT

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ சந்திரா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சேத்தனா என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தக் காதலுக்கு இருவரின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இருவரும் அங்கிருந்த ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, அங்கு வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

ரயில்வே காவல்துறையினர் இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, அவர்களின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News