பொதுத் தேர்வு முடிவுகள்.. 100 சதவீத கைதிகள் தேர்ச்சி பெற்று சாதனை..!
பொதுத் தேர்வு முடிவுகள்.. 100 சதவீத கைதிகள் தேர்ச்சி பெற்று சாதனை..!
கோவை மத்திய சிறையில் பொதுத் தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இந்த நிலையில், கோவை மத்திய சிறையில் உள்ள 33 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வும், 20 கைதிகள் 12-ம் வகுப்பு தேர்வும் எழுதி இருந்தனர்.
இதில், 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து கைதிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம், கோவை மத்திய சிறைச்சாலையில் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.