அரசுப் பள்ளிக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை காட்டுகிறது.. முதல்வர் அதிரடி பேச்சு..!

அரசுப் பள்ளிக்கு செல்வது மாநிலத்தின் வறுமையை காட்டுகிறது.. முதல்வர் அதிரடி பேச்சு..!

Update: 2022-06-12 05:20 GMT

நடப்பு ஆண்டில், இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹமீர்பூர் நகரில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது; “இமாச்சலப் பிரதேசத்தில் 14 லட்சம் மாணவ - மாணவியர் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். அவர்களில் 8.5 லட்சம் பேர் அரசுப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 5.5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.


அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது. இந்த 8.5 லட்சம் மாணவர்களின் வருங்காலம் தொடர்ந்து இருண்ட நிலையில் உள்ளது.

2 ஆயிரம் பள்ளிக் கூடங்களில் ஒரே ஒரு ஆசிரியரே உள்ளார். 722 பள்ளிகள் ஒரே ஒரு அறையை மட்டும் கொண்டுள்ளன” என்று தெரிவித்தார்.

Similar News