அயன் பட பாணியில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்!!

அயன் பட பாணியில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்!!

Update: 2022-05-24 10:05 GMT

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களை கண்காணித்தனர்.

அப்போது கேரள மாநிலம் கன்னூரை சேர்ந்த நிசார் மண்டல(27) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்
முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது துணிகளுக்கு நடுவே பர்ஸ் மற்றும் காலில் அணிந்து இருந்த ஷு ஆகியவற்றை பரிசோதித்து பார்த்த போது தங்கம் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 64,98,000  மதிப்புள்ள 1 கிலோ 402 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

அதேபோல் கொழும்பு, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து வந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். உள்ளாடை, உடமைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். 6 பேரிடம் இருந்து ரூ. 69,50,000  மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்கத்தை கைப்பற்றினர்

ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1,24,48,000  மதிப்புள்ள 2 கிலோ 902 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து கேரளா இளைஞர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

newstm.in

 

Similar News