மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நற்செய்தி.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நற்செய்தி.. அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!
ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணை பதிவாளர், தீயணைப்பு மீட்பு துறை மாவட்ட அதிகாரி ஆகிய பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இதில், ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில், ஊக்கத்தொகை பெற தகுதி வாய்ந்த 39 மாணவ - மாணவியருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.