அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான நல்ல செய்தி!!

அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான நல்ல செய்தி!!

Update: 2022-02-18 08:09 GMT

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் வீட்டு வாடகை சலுகை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்த அறிவிப்பு விரைவில் அரசிடமிருந்து வெளியாகலாம். ஊடகங்களில் வெளியாகும் தகவலின்படி, ஃபிட்மென்ட் காரணி மாற்றத்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கும்

ஃபிட்மென்ட் காரணியை 2.57 சதவீதத்திலிருந்து 3.68 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அகவிலைப்படி நிலுவைத் தொகை பாக்கியாக ரூ.2 லட்சம் வரை ஒருமுறை செட்டில்மென்ட் மத்திய அரசால் வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஒப்புதல் கிடைத்தால் ஊழியர்களின் கணக்கில் 18 மாத அகவிலைப்படி பாக்கித்தொகை டெபாசிட் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிட்மென்ட் காரணியை உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாக உயரும்.

ஒடிசா மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை உயர்த்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச அரசு ஜனவரி 31ஆம் தேதி அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது.

அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஊழியர்களுக்கு 3 சதவீதம் கூடுதல் அகவிலைப்படியை வழங்க உத்தரவிட்டார். 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் கூடுதல் அகவிலைப்படி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன் இதுபற்றிய மிகப் பெரிய அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து வெளியாகலாம்.

newstm.in

Similar News