கணவரை பழிவாங்க மகனை பாலியல் பலாத்காரம் செய்த எச்ஐவி பாதித்த பெண் !!

கணவரை பழிவாங்க மகனை பாலியல் பலாத்காரம் செய்த எச்ஐவி பாதித்த பெண் !!

Update: 2022-04-07 09:48 GMT

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் கணவரை இழந்து தனியாக வசித்து வந்தார். அவரின் கணவர் ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டு பின்னர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.

இந்த துக்கத்தை விசாரிக்க அந்த நபரின் அண்ணன், அவரது குடும்பத்தினருடன் பிலிபித்துக்கு வந்துள்ளனர். தனது கணவரால் தனக்கு இப்படி ஒரு கொடிய நோய் ஏற்பட்டதாக சோகத்தில் இருந்தார். இதனால் கணவரின் குடும்பத்தை பழிவாங்கும் உணர்வு, ஆத்திரம் அப்பெண்ணுக்கு உண்டானது.

துக்கம் விசாரிக்க வந்த கணவர் அண்ணணின் 15 வயது மகனை தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என சிறுவனை மிரட்டியும் உள்ளார். சிறுவன் தனது சொந்த ஊரான உத்தம் சிங் நகருக்கு சென்ற நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி அச்சிறுவனின் ஊருக்குச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே தெரிவிக்கக் கூடாது என பயந்துபோன சிறுவனை அப்பெண் மிரட்டிக்கொண்டிருக்கும்போது சிறுவனின் தாயார் அதை பார்த்துள்ளார்.

அப்போது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை தாயிடம் விவரிக்க அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உடனடியாக அருகேயுள்ள மகளிர் காவல்நிலையத்தில் சிறுவனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து 23 வயதான பெண்ணை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பழிவாங்கும் நோக்கத்தில் சிறுவனை அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். தனக்கு நேர்ந்த அவலத்திற்காக ஒரு பெண் ஒன்றுமறியாத சிறுவனுக்கு இந்தக் கொடூரத்தை ஏற்படுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News