ஹேப்பி நியூஸ்! விவசாயிகள் ஸ்மார்ட் ஃபோன் வாங்க மானியம்!!

ஹேப்பி நியூஸ்! விவசாயிகள் ஸ்மார்ட் ஃபோன் வாங்க மானியம்!!

Update: 2022-03-02 08:56 GMT

விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு மாநில அரசு சார்பாக மானிய உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மானிய உதவி வழங்கும் பணியை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கினார்.

கடந்த வாரத்தில் விவசாயிகள் பலருக்கு மானிய உதவி வழங்கப்பட்டது. மத்திய மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மையமாக வைத்து விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் திட்டம் அங்கு செயல்படுத்தப்படுகிறது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானியத் தொகையாக ரூ.1.84 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் விவசாயிகளிடமிருந்து 40,000க்கும் மேற்பட்ட விண்ணப்பம் வேளாண் துறைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்துக்காக அரசு தரப்பிலிருந்து ரூ.15 கோடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானியத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் விலையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.6,000 வரையில் மானியம் கிடைக்கும். விவசாயிகள் ரூ.15,000 வரையிலான விலைகொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், சந்தை வாய்ப்பை அதிகப்படுத்தவும், வேளான் பொருட்களை விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போன்கள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

Similar News