20 ஆண்டுகளாக தீராத தலைவலி.. ஸ்கேன் செய்து பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட் !

20 ஆண்டுகளாக தீராத தலைவலி.. ஸ்கேன் செய்து பார்த்தபோது கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட் !

Update: 2022-02-05 09:30 GMT

20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்த ஒருவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்களும் அந்நபரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்தது. ஆனால் சாதாரண தலைவலி தான் என நினைத்து, தைலம் போன்ற மருந்துகளை தலையில் தேய்த்தும், மாத்திரை சாப்பிட்டும் வந்துள்ளளார். இதனால் ஒவ்வொரு நாளும் வலியோடு வாழ்ந்து வந்தார். 

இறுதியாக குடும்பத்தினர் கட்டாயத்தின்பேரில், மருத்துவ பரிசோதனைக்கு சென்ற அந்த நபருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மண்டை ஓட்டில் துப்பாக்கி புல்லட் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது குறித்து அவருக்கும் காரணம் தெரியவில்லை.

தற்போது இந்த நபருக்கு 28 வயது ஆகிறது. தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கிறார் அவர். இதைகேட்டு மருத்துவத்துவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது.

சின்ன வயதில் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டது குறித்து ஞாபகம் இருக்கிறது என்றும், ஆனால், தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து அதனை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், சுமார் 0.5 செ.மீ முதல் 1 செ.மீ. அளவு கொண்டதாக இந்த புல்லட் இருந்தது. இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எனினும், புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல், வெளிப்புறத்திலேயே இருந்ததால், இவருக்கு பெரிய அளவில் ஆபத்து இல்லாமல் இருந்திருக்க கூடும், என்று தெரிவித்தனர்.

newstm.in

Tags:    

Similar News