இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Update: 2022-06-24 05:00 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட  ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 24.06.2022 அன்று வெள்ளி கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ‘உள்ளூர் விடுமுறை’ யாகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.

Similar News