தீ பிடித்து எரிந்த மருத்துவமனை... 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு!!

தீ பிடித்து எரிந்த மருத்துவமனை... 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு!!;

Update: 2022-05-27 04:25 GMT

ஆப்பிரிக்க நாடான செனகலின் மேற்கு பகுதியில் திவாவோன் நகரம் உள்ளது. அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ‘மேம் அப்து அஜிஸ் சை தபக்’ என்ற மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென அடுத்தடுத்து இடங்களில் வேகமாக பரவியது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அங்கிருந்த 11 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாகவும் சில குழந்தைகள் தீக்காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செனகல் அதிபர் மேக்கி சால் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த செய்தியை கேட்டு நான் வேதனையும், மிக துயரமடைந்தேன்.” என்றார்.

மேலும், “அவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவந்துள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு நகரமான லிங்குவேரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News