குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?
குழந்தைகளுக்கு ஆதார் கார்டு விண்ணப்பிப்பது எப்படி?
அரசு திட்டங்களின் கீழ் பயன்பெறுவது முதல் வருமான வரித் தாக்கல் செய்வது வரை பல விஷயங்களுக்கு ஆதார் கார்டு அவசிய தேவையாக உள்ளது. 18 வயதுக்கு மேலானவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கும் பால் ஆதார் கார்டுஎனப்படும் தனி வகை ஆதார் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் குழந்தையை சேர்க்கும்போது கூட பால் ஆதார் கார்டு அவசியம். குழந்தைக்கு பால் ஆதார் கார்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
புதிதாக பிறந்த குழந்தை முதல் சிறுவர்கள் வரை அனைவரும் பால் ஆதார் கார்டு பெறலாம். பால் ஆதார் கார்டு பெற குழந்தையின் பிறப்புச் சான்றிதல் அல்லது அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட டிஸ்சார்ஜ் ஸ்லிப் (Discharge Slip) வேண்டும்.
பெற்றோரில் ஒருவரின் ஆதார் கார்டு வேண்டும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் கார்டு பெற வேண்டுமெனில் ஆதார் சேவை மையத்துக்கு சம்பந்தப்பட்ட குழந்தையையும் பெற்றோர் அழைத்துச்செல்ல வேண்டும்.
பால் ஆதார் கார்டு பெறுவதற்கு அருகில் உள்ள ஆதார் சேர்க்கை மையத்துக்கு செல்லவும். ஆதார் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டுடன் சமர்ப்பிக்கவும்.
பெற்றோரின் மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட வேண்டும். இந்த வழிமுறைகளை பின்பற்றி பால் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
newstm.in