பைக்-ஐ ரயில் மூலம் எளிமையாக அனுப்புவது எப்படி?
பைக்-ஐ ரயில் மூலம் எளிமையாக அனுப்புவது எப்படி?
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அனுப்பமுடியும். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ரயில் மூலமாக பைக்கை கொரியர் அனுப்புவது சுலபமான ஒன்றுதான். கட்டணமும் குறைவு. உங்களுடைய பைக்கை பார்சல் அனுப்ப அருகிலுள்ள ரயில் நிலையம் சென்று பார்சல் கவுண்டர் மூலம் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற்று அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும்.
ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். சரிபார்ப்பின் போது அசல் நகல் தேவைப்படலாம். கடைசியாக பார்சல் செய்வதற்கு முன் உங்களுடைய பைக்கின் டேங்க் சரிபார்க்கப்படும்.
நீங்கள் பைக்கை அனுப்ப விரும்பும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். பைக்கின் பதிவுச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ஆவணங்களை உங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஹெட்லைட் போன்றவை உடையாமல் இருக்கும்படி பைக்கை நன்றாக பேக்கிங் செய்ய வேண்டும். பைக்கில் பெட்ரோல் இருக்கக்கூடாது. பெட்ரோல் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
ரயில் மூலம் பொருட்களை அனுப்புவதற்கு, எடை மற்றும் தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 500 கிமீ தூரம் வரை பைக்கை அனுப்புவதற்கான சராசரி கட்டணம் ரூ.1200. சற்று கூடவோ குறைவாகவோ இருக்கலாம். இது தவிர பைக்கை பேக்கிங் செய்ய 300 முதல் 500 ரூபாய் வரை செலவாகும்.
இந்த பார்சல் வசதியின் கீழ், வாகனத்தின் பதிவு உங்கள் பெயரில் இல்லாவிட்டாலும் உங்களுடைய ஐடியை வைத்தே வாகனத்தை முன்பதிவு செய்யலாம். ஆனால் இதற்கு வாகனத்தின் ஆர்சி புக் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் அவசியம்.
பைக்கில் எந்த சேதமும் ஏற்படாதவாறு சரியாக பேக் செய்ய வேண்டும். பார்சல் முன்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். லக்கேஜ் புக்கிங் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
newstm.in