ஐபிஎல் எலத்தில் பரபரப்பு.. மயங்கி விழுந்தார் ஹியூ எட்மீட்ஸ்..!

ஐபிஎல் எலத்தில் பரபரப்பு.. மயங்கி விழுந்தார் ஹியூ எட்மீட்ஸ்..!

Update: 2022-02-12 16:26 GMT

15-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த முறை, வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன.

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டவர் உள்பட 25 வீரர்களை வைத்துக் கொள்ளலாம்.

இதன்படி பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகிறது. இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) நடைபெறுகிறது.

இதில், நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில் இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கியது. அப்போது, ஐபிஎல் ஏலத்தை முன்னெடுத்து நடத்திய ஹியூ எட்மீட்ஸ் என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், ஏலத்தில் இடைவேளை விடப்பட்டது. உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News