கண்ணாடி வழியாகவே பார்த்தேன்.. விசாரணை ஆணையத்தில் இளவரசி விளக்கம்..!
கண்ணாடி வழியாகவே பார்த்தேன்.. விசாரணை ஆணையத்தில் இளவரசி விளக்கம்..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் இன்று ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி இன்று (21-ம் தேதி), அவர்கள் இருவரும் விசாரணை ஆணையத்தின் முன் நேரில் ஆஜராகினர். அப்போது விளக்கம் அளித்த இளவரசி, “ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனைக்கு 75 நாட்களும் சென்றபோது, ஜெயலலிதாவை ஓரிரு முறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன்.
கடந்த 2014-ம் ஆண்டில் சிறைக்கு சென்றபோது ஜெயலலிதா மன உளைச்சலில் இருந்தார். அதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அவர் உடல்நலக் குறைவுடன் இருந்தார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது, சசிகலா மட்டுமே அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.