ரஷ்ய அதிபரை கடித்துவிட மாட்டேன்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிக்கிய உக்ரைன் அதிபர் !!
ரஷ்ய அதிபரை கடித்துவிட மாட்டேன்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்து சிக்கிய உக்ரைன் அதிபர் !!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து முன்னேறி வருகிறது. எனினும் உக்ரைன் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷ்ய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
போரை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ளது. சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதால் சண்டையின் தீவிர தன்மை சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்ய அதிபர் புதின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். அது ஒன்றே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழி. 30 மீட்டர் இடைவேளியில் அல்ல. நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்? என ரஷ்ய அதிபருக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஷ்ய அதிபரை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர் நக்கல் செய்துள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
newstm.in