IPL: லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு

IPL: லக்னோவை வீழ்த்தி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது பெங்களூரு;

Update: 2022-05-26 05:26 GMT

ஐ.பி.எல். தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் ராகுல் தலைமையிலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டூப்ளசி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. களத்தில் ஒற்றை ஆளாக போராடிய பட்டிதார், 54 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார். ஐபிஎல் அரங்கில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் பதிவு செய்த சதங்களின் வரிசையில் இது நான்காவது சதம்.

ஆர்சிபி அணிக்காக பிளே-ஆஃப் சுற்றில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர், ஐபிஎல் வரலாற்றின் பிளே-ஆஃப் சுற்றில் சதம் பதிவு செய்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார். தினேஷ் கார்த்திக், 23 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். படிதார் அதிரடியாக ஆடி 54 பந்தில் 112 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 


இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மனன் வோரா 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல்.ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு தீபா ஹூடா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஹூடா 45 ரன்னில் வெளியேறினார். ஸ்டோய்னிஸ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்ட போது தனி ஆளாகப் போராடிய ராகுல் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். அவர் 79 ரன்கள் எடுத்திருந்தார். ராகுல் வெளியேறிய அடுத்த பந்தே குர்னால் பாண்டியாவும் வந்த வேகத்தில் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றி 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய லக்னோ அணி 4வது இடத்தை தக்கவைத்தது.

பெங்களூரு அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட், சிராஜ், ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கோப்பையை நோக்கி பயணத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று பெங்களூரு இரண்டாவது குவாலிபையர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை நடக்கும் குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பெங்களூரு.

Tags:    

Similar News