IPL: தீபக் சஹார், ருதுராஜ் விளையாடவில்லையா? - சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்த அதிர்ச்சி தகவல் !!

IPL: தீபக் சஹார், ருதுராஜ் விளையாடவில்லையா? - சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்த அதிர்ச்சி தகவல் !!

Update: 2022-03-15 20:00 GMT

ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கி மே 29ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான மெகா ஏலத்திற்கு முன்பு தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மெகா ஏலத்தில் அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகிய பழைய சிஎஸ்கே வீரர்களை தட்டித்தூக்கியது. மேலும் டிவோன் கான்வே, ஆடம் மில்னே, ஜோர்டன், மஹீஷ் தீக்ஷனா, ப்ரிடோரியஸ் ஆகிய வலுவான வெளிநாட்டு வீரர்களையும் ஏலம் எடுத்தது. இப்படி 25 பேரை வாங்க மொத்தம் 87.05 கோடியை செலவு செய்தது. 

இந்நிலையில் இந்த மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களில் பலர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்காதவர்கள் என்பதால், கிட்டதட்ட 15-க்கும் மேற்பட்ட சிஎஸ்கே வீரர்கள், சூரத்தில் தங்கி பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சிஎஸ்கேவில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அணியில் இணையாமல் இருக்கிறார்கள். மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை. ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருக்கிறார். இதனால், இந்த இருவரும் 15ஆவது சீசனில் பங்கேற்கவில்லை என்றால், அது சிஎஸ்கேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணயின் நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில், தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவரின் உடற்தகுதி குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதனால், அவர்கள் எப்போது அணியில் இணைவார்கள் என்பது குறித்து எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. இதுகுறித்து பிசிசிஐயிடம் கேட்டபோது, அவர்கள் முழு உடற்தகுதி அடைந்த பிறகு நாங்களே உங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று மட்டும் கூறினார்கள். அவர்கள் இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் எனக்கு தெரியும்,  எனக் கூறினார்.

newstm.in

Tags:    

Similar News