IPL: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ செம வெற்றி !
IPL: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ செம வெற்றி !
ஐ.பி.எல் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ரன்கள் விளாசினார். தீபக் ஹூடா 52 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் பிருத்வி ஷா 5 ரன்களிலும், டேவிட் வார்னர் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 37 ரன்கள், கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
இதன் வெற்றி மூலம் லக்னோ அணி 14 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளது.
Newstm.in