மார்ச் 26இல் தொடங்குகிறது ஐபிஎல்!!

மார்ச் 26இல் தொடங்குகிறது ஐபிஎல்!!

Update: 2022-02-25 08:45 GMT

ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது.

55 லீக் சுற்று போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில் மற்றும் நவிமும்பையில் உள்ள ப்ரோபர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதர 15 லீக் போட்டிகள் புனே நகரில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக தெரியவருகிறது. தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் மற்றும் குரூப் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் சுற்றுப் போட்டிகளில் மோத உள்ளன. அதில் ஒரு அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 4 போட்டியிலும் மற்றும் டிஒய் பாட்டில் மைதானத்தில் 4 போட்டியிலும் விளையாட உள்ளது.

அத்துடன் நவி மும்பையில் உள்ள ப்ராபர்ன் மைதானத்தில் 3 போட்டியிலும் மற்றும் புனே நகரில் இருக்கும் எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் 3 போட்டியிலும் ஒரு அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளே ஆப் சுற்று போட்டிகள் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 2 மாதங்கள் நடைபெற உள்ள தொடரின் மாபெரும் இறுதி போட்டி வரும் மே 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது.

newstm.in

Similar News