ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்!!

Update: 2022-02-04 08:29 GMT

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலகிற்கே சவாலான இயக்கமாக மாறியுள்ள ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அதனால் அந்த அமைப்பை ஒடுக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டதாக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


அதில், தனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன என குறிப்பிட்டுள்ளார்.

நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, .எஸ்..எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்தில் இருந்து அகற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

newstm.in

Similar News