ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால் இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!
ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால் இந்த எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் தெர்வித்தார்.
மேலும் பயோ மெட்ரிக் முறையால் ரேசன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதாகவும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அது குறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.