தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை விடுமுறை..!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. நாளை விடுமுறை..!

Update: 2022-03-18 15:02 GMT

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன.

ரேஷன்கடை பணியாளர்களுக்கு அன்று விடுமுறை வழங்கப்படாததால், அதற்கு மாற்று நாளாக (மார்ச் 19-ம் தேதி) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News