வாக்குறுதி வழங்குவதை தடுக்க வழி இருக்கா..?: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

வாக்குறுதி வழங்குவதை தடுக்க வழி இருக்கா..?: மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி..!;

Update: 2022-07-27 06:35 GMT

அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

“அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷிவினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, ‘வாக்குகளை கவர இலவசங்கள் என்ற வாக்குறுதியைக் கட்டுப்படுத்த வழிவகை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டனர்.

மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் “இந்த பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் தான் தீர்க்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கு, “இலவசங்கள் தொடர வேண்டுமா, வேண்டாமா என்று நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுங்கள்” என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.

அதன்பின்னர், கோர்ட்டில் மற்றொரு வழக்குக்காக காத்திருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம், ‘இது குறித்து ஏதாவது பரிந்துரைக்க முடியுமா..? இந்த இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது..?’ என்று தலைமை நீதிபதி ரமணா அடங்கிய அமர்வு கேட்டனர். அப்போது கபில் சிபல்,  “இலவசங்கள் ஒரு "தீவிரமான பிரச்சினை. மாநில அளவில் அதைச் சமாளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Similar News